நகைச்சுவை= ஆஹா ந னு ஏண்டாப்பா பெயர் வெச்ச

பாட்டி , பேரனிடம் : ஏண்டாப்பா , மணி, உன் பெண் குழந்தைக்கு
என்னமோ புதுசா ஒரு பேர் வெச்சிருக்கிறதா
உன் அம்மா சொன்னா .....................அது என்ன
பேர் அப்பா , சொல்லமாட்டாயா ? இப்பல்லாம்
பசங்க பேர் தேர்வு செய்ய , பெரியவர்களை
யாரும் கலந்து ஆலோசிப்பதில்லையே; அதான்
கேக்கறேன்பா ..................

பேரன் பாட்டியிடம் : பாட்டி, என் பெண்ணுக்கு , நானும் என்
பெண்டாட்டியும் சேர்ந்து தேடி ,
ஆஹா நா னு வெச்சிருக்கோம் .............
ஆஹா னு செல்லமா கூப்பிடறோம் ........

பாட்டி பேரனிடம் : ரொம்ப நன்னா இருக்குடா போ; நம்ம
தமிழ்நாட்டில் இல்லாத பெண் பிள்ளை
பேரா? இது என்னடா , ஆனா, உணா பெரு
அதுவும் அழகான பெண் குழந்தைக்கு .........
சுத்தம் போ ..................ஏன் நீங்கள் எல்லாம்
இப்படி வெளி மாகாணம், வெளிநாடு
மோகத்தில் இருக்கீங்களா தெரியலையே
நம்ம தமிழில் இல்லாத பேரா பெண்
குழந்தைக்கு................இது என்னடா ,ஆஹா ,
ஊத்துனு ஒரு பெயர்........................

பேரன் : : ஆஹா நா என்றால் உதயம் னு அர்த்தம்
உதயத்தில் இருக்கின்ற உற்சாகம் என்னை
எப்போதும் ஈர்க்கும் ............அதான் அந்த
பெரு பாட்டி..............இப்போ சொல்லு
பெயர் நன்னா இருக்கா ?

பாட்டி : நீ என்னதான் சொன்னாலும் எனக்கு
நம்ம தமிழ் பெயர்கள்தான் பிடிக்கும்
ஏன் நீதான், உதயம் பிடிக்கும்னு சொல்லற
'உதயா'னு பெயர் வெச்சிருக்கலாமே.......

பேரன் : ஆஹா...........இது எனக்கு அப்போ
தோணலையே பாட்டி............

பாட்டி : அதுக்கு தான் டா வீட்டு பெரியவங்கள
கலந்து ஆலோசிக்கணும்னு சொல்லுவாங்க .

இப்பவாவது புரிஞ்சுக்க...........அடுத்த
குழந்தைக்கு மறக்காம நம்ம ஊரு
பெயரை வைடா மறக்காம..........

பேரன் : சேரி பாட்டி................அப்படியே...........

(ஆஹா ந= உதயம்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Sep-17, 2:24 pm)
பார்வை : 292

மேலே