திருமண வாழ்த்து

இரு மனம் இணைந்து
காதலும் நட்பும் கரை புரண்டோட

உணர்வுகள் பரிமாறிக்கொள்ள
இல்லறத்தை பகிர்ந்துக்கொள்ள
உயிரும் உடலுமாய்
ஓர் உயிராக பிணைந்திட
ஒருவர் நலனில்
இன்னொருவரும் அக்கறை கொள்ள
ஒருவரின் உணர்வு
இன்னொருவரின் மதிப்பாக(புரிதலாக) மாறிட
இருவரும் இணைந்து
வாழ்க்கையின் அடையாளமான
மழலைச் செல்வங்களை ஈன்றிட
வாழத் தேவையான
வளங்களை பெற்றிட
குளிருக்கு போர்வையாக
வெயிலுக்கு இதமாக
வாழ்வுக்கு பொருளாக(அர்த்தமாக)

***

இந்நாளில்
இரு கரம் கோர்த்து
ஒரு வாழ்க்கை
இருவரும்
அன்யோன்யமாக
மகிழ்ச்சியாக
மனநிம்மதியோடு
திருப்தியோடு
நலனோடும் வளமோடும்
என்றென்றும் மழலைச் செல்வங்களோடு சந்தோசமாக வாழ
மனதார வாழ்த்துகிறோம்(கிறேன்)
இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

பிரபஞ்சத்திலேயே
உங்கள் மனைவியை(பெயர்) எப்பொழுதும் மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கும்...
அவர்களின் உணர்வுகளை மதிக்கும்
சிறந்த கணவனாக
என்றும் உயிர்த் தோழனாக
இசையும் நாதமுமாய்
இதயமும் துடிப்புமாய்
விழியும் காட்சியுமாய்
பார்வையும் பாசமுமாய்
கோபிகனும் சிந்துயாவும்
பதினாறும் பெற்று...
என்றும் மகிழ்ச்சியாய்...
இன்று பிடித்த கரத்தை
வாழ்வின் எல்லா தருணங்களிலும்
இறுக்கமாய் பற்றி...
தங்களின் திருமண பந்தம் என்னும் பெறுமதியை
ஏழேழு பிறவியும்
தொடர வாழ்த்துகிறோம்...

தங்கள் கணவரின்
எண்ணங்களை (தேவைகளை)
கேட்காமலே
நிறைவேற்றும் தாயாக...
அவரோடு அன்பால் ஊடல் செய்யும் தோழியாக...
அவரை நன்கு புரிந்து வைத்திருக்கும் மனைவியாக...
அவரோடு விளையாடும்
குழந்தையாக...
அவருக்கு உற்ற துணையாக...
வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
பக்க பலமாக
தோள் கொடுத்து
அவர் தோள் சாய்ந்து
வாழும் தோழியாக...
அவரின் மனைவியாக
எல்லா பிறவியும்
அவரின் பாதை முழுக்க
அவர் கரம் பிடித்து பயணம் தொடர வாழ்த்துகிறோம்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Sep-17, 3:52 pm)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 33471

மேலே