தற்கொலை

என்னை ஏற்று கொள்ள
தைரியம் வந்த உனக்கு !!
வாழ்வை ஏற்றுக்கொள்ள
ஏன் தைரியம் வரவில்லை??
என்னிடம் நீ கொண்ட ஈர்ப்பு
ஏன் இல்லை உன் வாழ்விடம்??
என்னை பலவாறு இகழவும்,
புகழவும் செய்யும் மானிடர்களே
உங்களிடம் கேட்கிறேன்??
கனவுகள் பலவிருக்க
என்னை தேடி வர காரணம் என்ன??
வறுமையா? வாழ்க்கையா?
ஏமாற்றமா?? ஏக்கமா ?
எதுவுமில்லை இதில்!!!
கோழைத்தனம் !!!
வாழ்க்கையை சந்திக்க
தைரியமில்லாமல் என்னை
சந்திக்கிறீர்கள்!!
வாழ்க்கையும் நானும்
நெருங்கிய நண்பர்கள்!!
ஆனால் உங்களால் நாங்கள்
எதிரியானோம்!!
வாழ்க்கையை வெறுப்பவர்கள்
என்னிடம் வருவதால் !!!
கோழைகள் செய்யும்
வீரச்செயலா நான் ?
வேண்டாம் இந்த பட்டம் எனக்கு??
வாழ்க்கையில் ஏதேதோ சாதித்து
புத்தகங்கள் எழுத வேண்டிய நீங்கள்
ஏன் எழுதுகிறீர்கள்
கடைசி கடிதம்!!!
இப்படிக்கு
தற்கொலை

எழுதியவர் : ஸ்ரீஜே (25-Sep-17, 4:11 pm)
Tanglish : tharkolai
பார்வை : 284

மேலே