மெட்டுக்குப் பாட்டு

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

கண்ணிலே காந்தம் இல்லை
காதல் மனம் ஈர்க்க வில்லை !
கண்ணிலே காந்தம் இல்லை
காதல் மனம் ஈர்க்க வில்லை !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

நெஞ்சத்தில் வீரம் இல்லை
நேசத்தில் வேஷ மில்லை
மஞ்சத்தில் தூக்க மில்லை
மாலையும் பூக்க வில்லை !

நெஞ்சத்தில் வீரம் இல்லை
நேசத்தில் வேஷ மில்லை
மஞ்சத்தில் தூக்க மில்லை
மாலையும் பூக்க வில்லை !

தூது சென்று பேசிவர
தூயவன் யாரு மில்லை !
சுட்டுவிடும் காரணத்தால்
சூரியனும் போகவில்லை
துள்ளித் துள்ளி நீயாட
வானவில்லும் வளைய வில்லை !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

வானில் உந்தன் பேரெழுத
மேகத்தை அனுப்பிவைத்தேன் !
வான மங்கை கண்ணீரில்
மேகமும் கரைந்ததடி !

மின்னல் வெட்டும் வேளையிலும்
மேல் நடுங்க வேர்த்திருப்பேன் !
கன்னல் மொழி கேட்கும் வரை
காற்றைப் போல் நான் மிதப்பேன் !
மாரி வரம் தந்துவிட்டால்
பூரிப்பில் பூத்திருப்பேன் !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?



சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Sep-17, 10:50 pm)
பார்வை : 77

மேலே