வாடுமுன் சூடு
எட்டாப் பூவை
ஏணி வைத்தேனும்
எட்டிப் பறித்திடு..
நாளை வரும் கீழேயென்று
காத்திருந்தால்,
நான்குநாள் கழித்து விழும்-
சருகாக..
அதனால்
காலம் பூப்போன்றது,
வாடுமுன்னே சூடு...!
எட்டாப் பூவை
ஏணி வைத்தேனும்
எட்டிப் பறித்திடு..
நாளை வரும் கீழேயென்று
காத்திருந்தால்,
நான்குநாள் கழித்து விழும்-
சருகாக..
அதனால்
காலம் பூப்போன்றது,
வாடுமுன்னே சூடு...!