வாழ்க்கை காவியம்

தொலை தூரத்தில் இரயிலின் ஓசை
தூரமாய் சுற்றும் பட்டாம்பூச்சி
துள்ளி குதிக்கும் புள்ளிமான்கூட்டம்
துதி பாடும்.தூக்கணாங்குருவி...
.....எனக்குள்ளே
தொலைந்து போன அன்பின் ஏக்கம்


கருவிழியில் காதல் பார்வை
கண்ணுக்குள்ளே மழலை மொழி
கருங்கல்லால் சிறு காவியம்
கண்ணீரில் ஒரு காதல் கவிதை...
கடந்து போன நினைவின் வலி....


மருகித் துடிக்கும் மனதின் ஏக்கம்
மறுபடி மறுபடி பிறந்திட துடிக்கும்
அழித்திட இது காகிதமல்ல...
அழகாய் இறைவன் வரைந்த
வாழ்க்கை காவியம்...

எழுதியவர் : நிஷா (28-Sep-17, 7:43 am)
Tanglish : vaazhkkai kaaviyam
பார்வை : 223

மேலே