புரிகிறதா
என்னைக் கேட்டுப் பெறுவது
என்பது
எளிதாய் இல்லை,
எனக்கு.
அடுத்தவரை
சிரமப்படுத்துவது
ஆகாத செயல்தான்.
என்னை நானே
வதைப்பதை
எப்படிச் சொல்வது?
என் வலியும், காயமும்
ரத்தக் கசிவும்
நீங்கள் அறியாதது.
எதற்கு சொல்கிறேன்
என்பது புரிகிறதா
உங்களுக்கு?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
