அறிவுரை அல்ல அக்கறை

அறிவுரை அல்ல
அக்கறை...!

நல்லவர்களையும்
நயவஞ்சகர்களாக மாற்றும்
உலகம் இது..!

உன் நிலைமையே யோசித்து பார்..!

பொய்யும் பொறாமையும் பொங்கி வழியும் அரசியலில் உன்னை போன்ற வெள்ளந்திகள் தாக்கு பிடிப்பது கடினம் நண்பா...

தர்மத்தை தூக்கிலிட்டு
அதர்மத்தை தூண்டிவிட்டு
அதில் ஆதாயம் தேடுபவர்கள்தான்
இப்போது உள்ள அரசியல்வாதிகள்..!

தேசியவாதிகள் இல்லாத அரசியல்
எப்போதோ சாக்கடையாக மாறிவிட்டது.
இப்போது உள்ள அரசியல் களம் மதவாதிகளுக்கும் மனநோயாளிகளுக்கும் என்றாகிவிட்டது.

இதில் நீயும் ஒருவனாக இருப்பது
ஒருபோதும் என் மனம் ஏற்கவில்லை.

ரசிக்க மட்டும் செய்
ரசிகனாக மாறாதே
தொண்டுகள் செய்
தொண்டனாக மாறாதே
இது என் நண்பன் எனக்கு சொன்னது
இன்று நான் உனக்கு சொல்கிறேன்...

உயிர் தொண்டன்
உண்மை விசுவாசி
இதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே இனிமை தரும்
இயல்பு வாழ்க்கையில்
உன் உழைப்பு மட்டுமே உனக்கு சோறு போடும்...

எவனோ ஒருவனின் பயணத்திற்கு
எரிபொருளாக நீ மாற வேண்டாம்
உனக்கென்று ஒரு பாதை உள்ளது
அதில் உன் பயணத்தை தொடங்கு...

என்னை விட நீ புத்திசாலி
என்றே நானும் நம்புகிறேன்
அன்னை தந்தை அன்பு தங்கை
உன்னை மட்டும் உலகமாக நம்பியுள்ளனர்
அவர்களுக்காக வாழு நண்பா...
அரசியல் நமக்கு வேண்டாம் நண்பா...

இது அறிவுரை அல்ல
அக்கரை..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (8-Oct-17, 12:27 pm)
பார்வை : 2086

மேலே