"நதியோட்டம்...4"

நதியே! உன்
உயிரூட்ட பாதைகளை,

கலாச்சார நுழைவாயிலாகவும்
நாகரீகத்தின் நகரமாகவும்,

வளமையின் இருப்பிடமாகவும்
நீண்ட பட்டியலிடுகின்றனர்...

இத்தனை செய்தும்
எத்தனை அமைதியாய்,

யாருக்கும் தொந்தரவின்றி
உன்வழி பார்த்து

ஊர்ந்து செல்கின்றாயே...

உன் கருணையால்
காலங்கள் கரைகின்றன...

தெளிந்த நதியோட்டமாய்...!!!

எழுதியவர் : பிரிட்டோ ஆ (27-Jul-11, 12:17 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 367

மேலே