தமிழ் வாழ்க

பொற்கிழியாய் புத்தகப்
பரிசில் கிடைத்த மகிழ்வில்
புலவராய் நான்!
தமிழால் தட்டினால்
ஆழ்மனதின் அற்புத சக்தியாய்
வாயிலருகில் பரிசில்
வந்ததன் மர்மம் என்ன?
கீதமிசைத்த திரை மறைவு
கின்னரங்கள் அரங்கேற்றமோ!
இராசராசன் எழுப்பிய
பிரகதீஸ்வரன் அருளாலே
தமிழுக்கும் தட்டிக் கேட்க
தரணியிலே உணர்வுண்டு!
தமிழ் எழுத்து வாழ
தமிழாலே வாழ்த்துகிறேன்!

எழுதியவர் : லட்சுமி (19-Oct-17, 6:39 pm)
Tanglish : thamizh vazhga
பார்வை : 168

மேலே