இயற்கையொரு பாடசாலை

பட்டாம்பூச்சிகளிடம் கற்றேன்
சந்தோசமாக வாழ
எறும்புகளிடம் கற்றேன்
சேமித்துவைக்க...
காக்கைகளிடம் கற்றேன்
பகிர்ந்து உண்ண
சிலந்தியிடம் கற்றேன்
விடாமுயற்சியை...
பசுக்களிடம் கற்றேன்
தியாகத்தை
நாய்களிடம் கற்றேன்
விசுவாசத்தை...
இயற்கையொரு
இலவச பாடசாலை கற்றுக்கொள்ள
எவ்வளவோ உள்ளது
கற்க தொடங்கினால் வாழ்க்கை இனிமையான பூஞ்சோலைப்போல்
மனம் வீசிக்கொண்டே இருக்கும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Oct-17, 4:19 pm)
பார்வை : 182

மேலே