நானும் ஒரு கவிஞன்

அன்பே
உன்னை
காதலிக்கில்லை
ஓடிஒலியவில்லை
மறைக்கவுமில்லை
மறுக்கவுமில்லை
மலரை பார்த்து இரசிக்கவுமில்லை
கவிஞனுமில்லை
கலைஞனுமில்லை
விண்ணில் பிறக்கவில்லை
நான்எ
நானாக இருந்தேன்
ஏதோ ஏங்கிருந்தோ வந்து
என்னுல் நுழைந்துவிட்டது
என்னவென்று தெரியவில்லை
ஏநென்றுப் புரியவில்லை
ஏதேதோ தோன்றுகிறது
சொல்லவும் முடியவில்லை
சொர்க்கமா நரகமா அறியவில்லை
சொந்தங்கள் இருந்தும்து
சோகத்தில் நின்றேன்
தனிமையில் வாடினேன்
என்ன தவறு செய்தேன் - அட
எதையோ இரசிக்கிறேன்
அதையே மறைக்கிறேன்
என்னுள்ளே சிரிக்கிறேன்ன்
அதையும் மறுக்கிறேன்
ஏனடா இந்த மாற்றம்
எதற்கு இந்த வேஷம்
எது உண்மை? பொய்
ஏன் இப்படி நினைக்கிறேன்
என் உள்ளத்தை இப்படி சோதித்து
பார்த்தவன் யார்
என்னோடு ஏன் இந்த விளையாட்டு
உன்னைக் காணும் நொடியில்
என்னை ஏன் மறந்து போகிறது
நீ என்னுள் இருக்கிறாயா? இல்லையா?
எப்படி அறிந்துகொள்வது
என்னுள் ஏன் இந்த போராட்டம்
இன்று
என் மனக்கதவை திறந்துவிட்டேன்
தவிப்பை துறந்துவிட்டேன்
எனக்கும் காதல் வந்துவிட்டது
இனி நீ இன்றி நானும் இல்லை
இனி நானும் ஒரு கவிஞன்
உன்னை இரசிக்கத் தெரிந்த
நல்ல கவிஞன்

எழுதியவர் : Vanmathi (29-Oct-17, 1:27 am)
சேர்த்தது : Vanmathi
Tanglish : naanum oru kavingan
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே