ஏதும் நடக்கலாம்

கவலையுடன் கேட்டது
கணினியின் விசைப்பலகை என்னிடம்

கவிதை எழுதுவது
குறைந்ததன்
காரணம் என்னவென்று

கோபம் என்மீதா
கவிதைகள் மீதா
ஆர்வத்துடன் வினவியது

சமூகத்தின் மீதா
சம்பவங்கள் மீதா
சலிப்புடன் கேட்டது

முகங்களின் மீதா
முகநூல் மீதா
முடிவாய் கேட்டது

பணிவோடு கூறினேன்
பதற்றம் இல்லாமல்
பதிலாக இதனை

விடியலே பிறக்காத
தமிழகத்தை எண்ணி
வருந்திடும் மனதில்

கற்பனை வளம்குன்றி
சிந்தையும் வறட்சியில்
சிறுதுளியும் வறண்டது ...

கவிதைக்கும் ஜிஎஸ்டி
வரிக்குவரி வரிவிதித்து

எழுதுபவரின்
ஆதார் எண்ணும்
கட்டாயம் பதிவிட
கட்டளையும் பிறந்திடும்
அரசாணையும் வந்திடும் !

ஏதும் நடக்கலாம்
ஆண்டிகள் அரசிலே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Oct-17, 7:43 am)
Tanglish : yethum nadakkalaam
பார்வை : 489

மேலே