நீ நான் நாம்

என்ன ஆட்சி இது........
நாங்கள் தேர்ந்து எடுத்தவர் எங்கே ???

ஆள ஆளில்லாமல் மறைந்து விட்டதோ
பூ பூ பூவுக்கு அடியில்

சாதிகள் மறந்துவரும் எந்நாட்டில்
மதஆட்சி கொஞ்சம் மலரநினைக்குதோ

தண்ணீரை தடுக்க தெர்மாகோல் விஞ்ஞானி பதவியில்
மதிப்பெண்கள் இருந்தும் மறுத்துவிட்டதால் என் தங்கை மண்ணுக்கு அடியில்

சுதந்திரம் கிடைத்தும் சுதந்திரம் ஆகவில்லை கார்ட்டூன் வாதிகள்
தவறு செய்யாமல் குண்டர் சட்டம் மது மறுப்பாளிகளுக்கு

காட்சி பொருள் ஆகிவிட்டோம் காவிகளுக்கு மத்தியில்
எங்கள் கரிய இருள் போகவேண்டும் ஆண்டவர் கைகளில் ....

எழுதியவர் : வான்மதி கோபால் (7-Nov-17, 7:54 pm)
பார்வை : 442

புதிய படைப்புகள்

மேலே