பெண் விடுதலை

பண்பாடு பாரதம் சொல்லி
பாகுபடுத்திய தேசம்
பண் பாடி வளர்கிறது
பகுத்தறிவு தேசம்

அடுக்களை அறை மட்டும் சொந்தம்
அடையாளம் தெரியா தேசம்
அமைதிக்கு குரல் கொடுத்து
அகிலம் தெரிந்த தேசம்

அண்ணாந்து பார்த்து வானம்
அளவறிந்த உலகம்
ஆகாச ரதம் அதில் ஏறி - வானம்
அளக்கும் தேசம்

ஆணுக்கு நிகர் பெண்
சொல்லாதே மனிதா!!
பெண்ணுக்கு நிகர் ஆண் இல்லை
சான்று உன் அன்னை போதும்....

கடவுளின் சக்தி
ஆன்மாவின் கரு
பனிக்குடம் சுமந்து
பக்குவம் பார்த்தவள்

பாரதி கண்ட பெண்மை
அடிமை நிலை மாறியும்
இன்றும் கிடைக்கவில்லை
பெண் விடுதலை !!!

பேருந்தில் உரசியும்
காம பார்வை வீசியும்
தனிமைப் படுத்தும் மனிதா
மாற வேண்டியது உன் மனமே!!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (9-Nov-17, 12:22 pm)
Tanglish : pen viduthalai
பார்வை : 1170

மேலே