நானறியேன் விடைதனை
ஒருவேளை சோற்றுக்கு
ஓடாய் உழைக்கும்
மனிதனும் இங்கே...
நல்லவராக
வேடமிட்டு
கொள்ளையடிக்கும்
கூட்டமும்
இங்கே.....
அடுத்த வேளைக்கு
வழியின்றி தவிக்கும் வறியவனும்
இங்கே.....
அடுத்தவர் சொத்தை
திட்டமிட்டு அபகரிக்கும்
திருடர்களும்
இங்கே....
பொதுநலன் கருதி
பாடுபட்ட பண்பாளர்
வாழ்ந்ததும்
இங்கே.....
சுயநலம் ஒன்றே
கொள்கை என்று
வாழ்பவர்களும்
இங்கே....
ஏழை எளியோன்
வறுமை வறியோன்
நிலையும் மாறுமோ ...
பசியும் பட்டினியும்
மண்ணில் என்றுதான்
மறையுமோ......
மாறிடுமா சமுதாயம்
மாற்றிடுமா இந்நிலையை
நானறியேன்
விடைதனை....?
பழனி குமார்