மரம்
மரம்
===============================ருத்ரா
என்னை வெட்டியெறியும் முன்
யோசித்திருக்கவேண்டும்.
இப்போது
வெப்பம் பூமியை
விழுங்க வந்து விட்டது.
நீ பெட்ரோலால் மலம் கழித்து
உன்னையே
கரிப்புகைக்குள் தள்ளி
காணாமல் போய்க்கொண்டிருக்கிறாய்.
தலைநகரங்கள் எல்லாம்
முகமூடி போட்டு உட்கார்ந்து இருக்கின்றன.
உன் நுரையீரல் பூங்கொத்துகள்
உனக்கே அங்கு
உன் கல்லறையின் கடைசிக்கல்லை
மூடக்காத்திருக்கின்றன.
வியாபாரம் செய்தால் போதும்
லாபம் குவித்தால் போதும் என்று
கம்பெனிகள்
பத்து டாலருக்கு
பத்து மோட்டார் சைக்கிளை
விற்பதற்கு குவித்து வைத்திருக்கின்றன.
ஆம்
இந்த பூதங்களின்
தாராளமய பொருளாதாரத்தில்
இனி
இந்த பூமியில் வெட்டவெளியே மிச்சம்.
ஒற்றை ஆள் கூட
ஒற்றை உயிர்ப்பிஞ்சு கூட
மேலே நட்சத்திரங்களை பார்ப்பதற்கு
வாய்ப்பில்லை.
=================================