சொக்கி நின்றேன்

பகல் நேரத்து
குளத்து நீரை
ஊடுருவிய
சூரியனாய்
எனக்குள்ளே
பிரதிபலித்து
மறக்கடித்தாய்
இவ்வுலகை!
மென்மையான
காற்று வந்து
எனை உசுப்ப
பாதி கண்திறந்து
சொக்கி நின்றேன்
உன் நினைவாய்
அந்த சொக்கலிலும்
உனைக்கண்டேன்
நிழலுருவாய்!
நா.சே