முதல் பார்வையில் காதல்

தரைப் பார்த்து நடந்தப் பாதத்தில்
தட்டுப் பட்டது ஒரு பூ - பூவை
தாண்டவா? - கையில்
ஏந்தவா? - என் மனம்
எடை போட்டுப் பார்த்தது
என் நினைவுகளை - கண்கள்
துழாவியது அதன் இதழ்களை.
முதல் பார்வையில் காதலாய்
முன் நிற்கும் பெண்ணைப் போல்
முகம் மலர்ந்து பார்த்தது என்னை.- நானும்
முத்தமிட்டு கையில் எடுத்தேன் அதன் தன்னை.
பூவைப் போல் ஒரு பூவையும் என்னை
பார்த்துவிட்டு மலர்ந்து நின்றாள்.- அது
தரை மீது இருந்த பூவைப் போல் - என் மீது
தானாக பார்த்த பூ அவளோ - அவளின் முதல்
பார்வையில் காதல் பூத்ததோ என்மீது.- நானும்
பார்வையில் தூது விட்டேன் அவள் மீது.

எழுதியவர் : சங்கு chandramoulee (7-Dec-17, 7:40 pm)
பார்வை : 175

மேலே