காதல் விழி
இரவின் இருளில் மலரும் நிலவாய்
நிலவின் ஒளியில் ஒளிரும் சுடராய்
உலகில் அழகாய் பொழியும் மழையாய்
உழியது செதுக்கும் கலைமிகு சிலையாய்
பாரில் பிறந்த பச்சைக் கிழியாய்
எழிலே நிலையென கனிந்த கனியாய்
அழகாய்ப் பிறந்த மெல்லிய முகிலாய்
தளிரில் தூரும் குளிரும் பனியாய்
என் உயிரைப் பறித்த காதல் விழியே !