என்று தணியும்

என்று தணியும்
இந்த
சுதந்திர தாகம்
என்று
அன்று கேட்டவனின்
பிறந்த தினம்
இன்று
இறக்கும் வரை
தீரவில்லை
இறந்தபின்னும்
மாறவில்லை
ஆள்மாறியது
ஆட்டம் மாறவில்லை
தளிர்கள்
தீப்பந்தமாய் ஒளிர
வெந்து செத்து
நொந்து கெட்டு
மாக்கள்
கண்டும் காணாது
குருடாய் நடித்த
சுயநல சுவாச
பதவி வெறி
மண்ணில் புதைந்து
நாறி..,
இன்று அவன் இருந்தால்
என்று மாறும் இந்த
நாற்றமெடுத்த ஊரும்
என்றே பாடியிருப்பான்..,
நா.சே