பிச்சைக்காரி

கந்தல் உடையில்,
காவிய நாயகி...!
கூந்தல் சடையில்,
குடியேறிய அழுக்கு...!
வறுமையின் பிடியில்,
வளம் இழந்த மேனி...!
வெம்மையின் கொடுமையில்,
வெடிப்புற்ற பாதங்கள்...!
பசியின் கோரத்தில்,
திருவோடான கைகள்...!
விடியலின் தேடலில்,
பாவையவள் கண்கள்...!
இரவின் விடியலுக்கு அல்ல – அவள்
வாழ்வின் விடியலுக்கு...!!!
- Written by JERRY