காதலின் உண்மை

விழியோடு விடை கேட்டு
விரைகின்ற நாட்களில்,
காற்றினில் கொடியாக
அசைந்திடும் நம் மனம்.
விதியோடு கை கோர்த்து
நொடிகளைக் கடக்கையில்,
சிறை பட்ட சிறகும்
கரை தொட்டு விரியும்.
கன்னியின் கண்களில் தோன்றிடும் அனலும்
உயிர் பறிக்கும் உன்னை எரித்து.
ஆண்களின் மௌனத்தில் புதை கொண்ட சிரிப்பும்
கழுத்தினில் பாம்பாய் உனைச் சுற்றி இருக்கும்.
கருவறை வாசம்
மறுமுறை காண்பாய்.
விஜயனாய் இருந்தும்
வேண்டி நீ தோற்பாய்.
நிஜம் அறியாமல்
கனவோடு கரைவாய்.
கண் திறந்தாலும்
இருளோடு உறைவாய்.
காதல் தந்த வலிகளை
காலம் சொல்லும் உனக்கு;
ஆனால் காதலும் சுகம் தான்
இனிய நினைவுகளில் மலர்ந்திருந்தால்.
அதுவரை தனித்திரு,
காலம் களித்திரு நண்பனுடன்!
வாழும் மட்டும்
இன்பம் கிட்டும்
நண்பன் அருகில்
நம்புகிறேன்!

எழுதியவர் : கிருஷிகா (12-Dec-17, 5:43 pm)
Tanglish : kathalin unmai
பார்வை : 419

மேலே