நண்பா உன் பிரிவால்...
உணராத உணர்வொன்றை
உணர்கின்றேன் உன்னாலே
சிறகு முளையாதா சிட்டாக
தவழ்கின்றேன் நட்பினிலே
கரம் ஒன்று உடைந்ததுவாய்
ஊனமானேன் நினைவினிலே..
பிரியமான நண்பனே
பிரிந்து சென்றாய் பலதூரம்
பிரியங்கள் எல்லாமே
பிணைந்ததடா ஒற்றையிலே
கண்ணுக்குள்ளே வானவில்லை
வளையுண்டு புகுத்திவிட்டு
காரணமில்லாமல்
இருள் மூடிக் கிடக்கின்றது.
தூரே போகும் நட்புக்கு
வரைவிலக்கணம் அறியாது.
நட்பென்ற சொல்லுக்கு
ஈடுண்டா உலகினிலே
நட்பின்றி வாழத்தான்
முடியுமா நினைவினிலே
நண்பா..!
தொலைதூரம் இருந்தாலும்
தொலையாது தொடருமடா
நம் நட்பு.