கைகோர்த்து நீ என்னுடன் நடக்கும்போது

குவிந்த மொட்டு மனம் திறந்தபோது
மென் மலரானது
குவிந்த உன்னிதழ்கள் மலர்ந்தபோது
புன்னகை எழிலானது
கவிந்த இமைகள் விரிந்தபோது
காதல் நதியானது
கைகோர்த்து நீ என்னுடன் நடக்கும்போது
மாலையும் அழகானது !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-17, 8:29 pm)
பார்வை : 703

மேலே