மனிதம்

கரை புரண்டு ஓடும் கங்கை நதியின் ஊற்று வற்றாது இருக்கு இன்னும்
வான் மழை இன்றும் பொய்யாகாது இருக்கு இன்னும்
பகலவன் வெண் கதிர் சுட்டெரிக்காது இருக்கு இன்னும்
நன் மலர்கள் மண்ணில் பூக்கின்றது இன்னும்
இயற்கை அன்னை சிரிக்கிறாள் இன்னும்
மானிட இனத்தில் இன்னும் மனிதம் வாழ்வதால்!!!!

எழுதியவர் : கீர்த்தி (31-Dec-17, 12:46 pm)
சேர்த்தது : keerthi
Tanglish : manitham
பார்வை : 99

மேலே