தெய்வக் குழந்தை
என்னை நானே மறந்திருந்தேன்!
கருமை இருளில் சுருண்டிருந்தேன்!
அம்மா முத்தம் அவள் பாஷையில்...
அப்பா முத்தம் அலைபேசியில்,
வலியில் அம்மா வயிறு பிடிக்க...
கணவர் அம்மா செய்கைகாட்ட!!!
சமுதாயக் கூடம் போனோம்...
சரியா எட்டு இருக்கும்,
ஊருக்கே சத்தம் எட்டியிடிருக்கும்!!!
பெண்ணென்று பெருவாரி மக்கள் ஏச,
பசிக்கு சோறு பாலாய்
கள்ளிப்பாலாய்...
ஆசை அதிகம் அப்போதில்லை
உயிரோடு இருப்பதைத்தவிர...
எழுத்து
ஜெகன் .G