பிறந்தது தை

ஏர்ப் பிடித்து வயலுழுது
எட்டுத்திக்கும் விளையும்
பயிரைக் காணும்
ஆவலில் மனம்
காத்துக் கிடக்கையில்
வீசும் காற்றும்
பெய்த மழையும்
எம் கனவெல்லாம்
பழாக்கிப் போனதே.......
தையும் பிறக்கப் போகுது
எங்களுக்கான வழி
மட்டும் மூடிப் போனதே......
இந்த வருடமும் பழைய கஞ்சி
தான் கதிரவனுக்கும்.......

எழுதியவர் : ஆர். கோகிலா (13-Jan-18, 8:24 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : pirandhadhu thai
பார்வை : 60

மேலே