இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஏர் பிடித்து நிலம் உழுது
உதிரத்தை வியர்வையாக்கி நிலத்தில் நீராய் பாய்ச்சி நிலத்தில் பொன் விளைவித்து
தான் உண்ணாமல் உலகிற்கு அன்னமிட்டு மகிழும்
உழவனுக்கு பெரும்விழா .
வானம் பார்த்து வெள்ளாமை செய்யும் உழவனுக்குத் திருவிழா
வெள்ளாமை எடுத்த மகிழ்ச்சியின் கொண்டாட்டம்.
தீய எண்ணங்கள் ஏறித்திட்டு நல்லன புகுத்தி
கொண்டாடிடும் போகி .
மழை வேண்டும் உழவு செய்திட
கதிரவனும் வேண்டும் ஏர் பிடித்திட
மண்ணின் வாசனையோடு விளைந்த மஞ்சளும்
தித்தித்திடும் கரும்பும் பூசணி பூவும்
மஞ்சளில் பிடித்த பிள்ளையாரும்
மாட்டு சாணத்தில் பிடித்த பிள்ளையாரும்
கொண்டு கிழக்கே உதிக்கும் கதிரவனுக்கு வாழ்த்து சொல்லி மண்ணின் வாசம் கொண்டு பொங்கலிட்டு
" பொங்கலோ பொங்கல் " என்று கொண்டாடிவோம் .
உழவு செய்ய மாடு கொண்டு
நன்றி கூறி மாட்டிற்கும் பொங்கலிட்டு கொண்டாடிவோம் .
உவகையுடன் மாரியம்மனுக்கும் பொங்கலிட்டு கறி சமைத்து கறி நாளை கொண்டாடிவோம்.

உழவனுக்கு நன்றி கூறி கொண்டாடிவோம்
தைத்திருநாளை
புத்தாடை அணிந்து ஆனந்தமாய் கொண்டாடிவோம்
எல்லாம் நல்லனவே வேண்டும்
மும்மாறி பொழிந்து உழவு செழித்திட வெள்ளாமை பெருகிட
நாடு செழித்திட கொண்டாடிவோம்
பொங்கல் திருவிழாவை
கரும்பு போல் எல்லாம் தித்தித்திட கொண்டாடிவோம்
இவ்வுவகை என்றும் நிலைத்திட கொண்டாடிவோம்
உறவுகள் இணைத்திடும் விழாவை சிறப்பாய் கொண்டாடிவோம்
எல்லாம் நல்வாழ்வு வாழ்ந்திட
உழவனுக்கு என்றும் மகிழ்ச்சி கிடைத்திட கொண்டாடிவோம்
ஆனந்தமாய் கொண்டாடிவோம்
அனைத்து உயிர்களுக்கும் உயிர் கொடுத்த உழவனுக்கு நன்றி செலுத்திடுவோம்
உழவர் திருநாளை
இது உழவனின் புத்தாண்டாய் கொண்டாடிவோம்..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : பிரகதி (13-Jan-18, 8:24 pm)
Tanglish : pongal vaalthukkal
பார்வை : 106

மேலே