தை மகளுக்காய்

''தங்கத் தை மகள் தன்னை
தமிழ்ர்கள் எல்லாம் கூடி
கரம் குவித்து வரவேற்போம் வாரீர்..
பழையன கழித்து
புதியன செயல்படுத்த
போகியோடு தொடங்குவோம்...
உலகிற்கு ஆதாரமான ஆதவனை வணங்குவோம் வாரீர்...
உணவளிக்கும் உழவனின்
உழைப்பிற்கு உறுதுணையாவோம் வாரீர்...
உழவுக்கு துணை நிற்கும்
உன்னத ஜீவன்களுக்கு
மதிப்பளிப்போம் வாரீர்....
உறவுகளுக்காய் நேரம்
ஒதுக்கி உணர்வுகளை பகிர்ந்து மகிழ்வோம் வாரீர்.....
அடுத்த தலைமுறைக்கு
அர்த்தம் நிறைந்த இந்த
திருநாளின் மகிமை உணர்த்தி கலாச்சார பெருமை உணர்த்தி பெருமிதத்தோடு இந்த
பொங்கலை கொண்டாடி மகிழ்வோம் வாரீர்....
''பொங்கலோ பொங்கல்''
-யாத்வி

எழுதியவர் : யாத்வி (13-Jan-18, 11:45 pm)
சேர்த்தது : YADHVEE
பார்வை : 97

மேலே