கதிர் காதல்

விதைகளுக்கு உயிரூட்டி
பக்குவமாய் நீர் பாய்ச்சி
சூரியன் விழிப்பதற்கு முன்னால் கண் விழித்து கவனித்து
அரை வயிறு கால் வயிறு நிரப்பி
கழனி நீரால் நிறைவதை பார்த்து
மனம் நிறைந்து
கதிர் விடும்போது ஒவ்வொரு
மூலைக்கும் ஒரு செருப்பை கட்டி
கண்படாமலும் பார்த்து கொள்வான் விவசாயி..............

எழுதியவர் : எட்வின் (16-Jan-18, 9:14 pm)
சேர்த்தது : எட்வின்
Tanglish : kathir kaadhal
பார்வை : 77

மேலே