இரண்டு வரி வாழ்கை

புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை!
புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....

--------------------------------------------------------------------------------

அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே!

உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....

ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!

-------------------------------------------------------------------------------

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!

ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!

-------------------------------------------------------------------------------

இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு.

காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.

---------------------------------------------------------------------------------

அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே.

உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே...

------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (18-Jan-18, 10:18 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 10990

மேலே