ஆளப் போறான் தமிழன்

ஆளப் போறான் தமிழன்,
தேதி:20 / 02 /2019
அம்மா மற்றும் அவளது மகன்கள் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தனர்.அம்மா விவசாயம் பார்க்கிறாள்.மகன்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும்
11ம் வகுப்பு பயில்கிறார்கள் .இளைய மகன் பெயர் அஜித்குமார்,மூத்த மகன் பெயர் ராஜா, நடு மகன் பெயர் முத்துக்குமார். இவர்கள் வசிக்கும் இடம் திண்டுக்கல் மாவட்டம் பூதிப்புரம் கிராமம்.
இவர்களது வாழ்கை மெதுவாக பல கஷ்டங்களுடன் ஓடி கொண்டு இருந்தது.

ஒரு நாள் இளைய மகன் அம்மாவிடம் அம்மா முதலில் யார் இந்தியாவை கண்டு பிடித்தது என்ற வினாவை வினாவினான்.அம்மாவோ 3 ம் வகுப்பு வரை தான் படித்தவள்.

அம்மா: எனக்கு தெரியாது மகனே.

இளைய மகன்: என்ன அம்மா இது கூடவா தெரியவில்லை.

அம்மா: நானோ மூன்றாம் வகுப்பு வரை படித்தவள் என்னிடம் பொய் கேக்குறியே.

இளைய மகன்: அம்மா, வாஸ்கோட காமா என்றவர் தான் முதலில் இந்தியாவை
கண்டுபிடித்தார். அவரை நமது நாடே வரவேற்றது என் என்றால் "வந்தாரை வாழ வைக்கும் நாடு".

அம்மா: அவர் எப்படிடா இந்த நாட்டிற்கு வந்தாரு. அவரு எந்த ஊரு என்று மகனிடம் கேட்டாள்.

இளைய மகன்: அவர் ஒரு யூரோப்பியர்.அவரது நாடு போர்ச்சுக்கல்.

அம்மா: அவன் என்ன பன்ணுணன் நம்ம நாட்டுல?

இளைய மகன்:அம்மா, அவன் ஒரு மாலுமி நிறைய நாடுகளை கண்டுபிடிப்பவன். அவன் இங்கு வந்து இங்குள்ள வளங்கள் அனைத்தையும் அவன் நாட்டிற்கு கொண்டு போய்விட்டான்.

அம்மா: ஏன்டா இப்படி எல்லாம பண்ணுனாங்க

இளைய மகன்: ஆமாம் அம்மா.

அம்மா : வெள்ளைக்காரன் கேள்வி பட்டு இருக்கியா?

இளைய மகன்: ஆம் அம்மா கேள்விப்பட்டு இருக்கேன். இந்தியாவை ஆண்டவர்கள் தானே?

அம்மா: ஆமாடா, அவன் இங்கு வந்து இந்தியாவை அடிமையாக்கி ஆண்டவன்.

அப்போது திடீரென நடு மகன் முத்துக்குமார் வீட்டினுள் நுழைந்தான்.

முத்துக்குமார் : என்ன இங்கு பன்னி கொண்டு இருக்கிறீர்கள்

அம்மா : நாம் நாட்டில் நடந்த வரலாறு நிகழ்வுகளை பேசிக்கொண்டு இருக்கிறோம்.

முத்துக்குமார்: யாரு அந்த வெள்ளையர்களை பற்றியா?

அம்மா : ஆமாம்.

முத்துக்குமார் : அட அம்மா,அவன் வந்து நம்ம நாட்டுக்கு பல கேட்டது பண்ணுனாலும் ஒரு சில நல்லது பன்னிருக்கான் தெரியுமா?

அஜித்குமார்(இளைய மகன்):என்ன அண்ணா சொல்ற அப்படி என்ன நல்லது பன்னி இருக்கான்?

முத்துக்குமார்: அவன் நம்மல வச்சு ரெயில் போக்குவரத்துக்கு, தரை போக்கு வரத்து என்று அவன் உருவாக்கினான். நமது வளங்களை அவன் நாட்டிற்கு எடுத்து செல்ல.
ஆனால் அவன் போகும் போது சிறிய வைர கல்லை மட்டுமே எடுத்து சென்றான். நாம் அப்போது தான் முதல் முறையாக ஒன்றனோம் தெரியுமா.அதன் மூலமாகாவே நாம் சுதந்திரம் ஆனோம். அதற்கடுத்து வந்து ஆண்டவர்கள் தான் அரசியல் வாதிகள்.

அம்மா : ம்ம்! ஆமா தாத்தா கூட சொல்லிருக்காரு அத பத்தி. அவரும் போராட்டத்துல கலந்து கிட்டவறு தான்.

அஜித்குமார்: அதற்கு அப்புறம் யாரும் ஒன்று கூட வில்லையா?

தீடிரென ஒரு குரல் அம்மா அம்மா என்று!!. அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் ராஜா மாடுகளை தொழுவத்திற்கு ஓட்டி வருகிறான். அம்மா உடனடியாக அனைத்து மாடுகளையும் தொழுவத்தில் காட்டுங்கள் என்றாள். முத்துக்குமார் மற்றும் அஜித் மாடுகளை காட்டுகின்றன. அம்மா நாம் கதை பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை என்றான் அஜித்குமார். ஆமாம் என்று அம்மா தலை ஆட்டினார்.ராஜா என்ன பேசி கொண்டு இருந்திர்கள் என்று கேட்டான். அனைத்தையும் அம்மா கூறினாள்.

அனைவரும் நேரம் ஆனதால் வீட்டுற்குள் போய் சாப்பிட நூழைந்தனர்.அம்மா உணவுகளை பரிமாறினாள் அனைவரும் உண்டு விட்டு படுக்கை அறைக்கு சென்றார்கள்.

அம்மா: ஆமாம் நாம் எங்கு விட்டோம்.

அஜித்துக்குமார்: அம்மா நன் ஒரு கேள்வி கேட்டேன் பதில் யாரும் கூறவில்லை.

முத்துக்குமார்: என்ன கேள்விடா?

அஜித்குமார் : சுதந்திரத்திற்கு அப்புறம் யாரும் ஒன்று கூட வில்லையா?

ராஜா: என்னடா மறந்துட்டீங்களா ? இரண்டு வருடத்திற்கு முன்னால் ஜல்லிக்கட்டுக்கு ஒன்றாய் கூடினோம் அல்லவா.

முத்துக்குமார்: ஆமாம் அண்ணா நமது பள்ளி விடுமுறை விட்டபொது நாம் ஒன்றை கூடி ஒக்காந்து இருந்தோமே அத.

ராஜா: ஆமாம்டா ஆமாம். அந்த போராட்டம் உலக அளவுல ஒரு உத்வேகத்தை கொடுத்து இருக்கு.

அம்மா: அட போடா இப்ப இருக்குற அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறான் நீங்க வேற?

ராஜா : அம்மா, வரும் 2021 ம் வருடம் ஒரு புரட்சி வெடிக்கும். மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் ஒரு கட்சி உருவாக்க திட்டம் திட்டி உள்ளனர்.

அஜித்குமார்: என்ன அண்ணா சொல்ற இளைஞர்கள் கட்சிய இளைஞர் என்ன பண்ணுவாங்க.

ராஜா: இனிவரும் காலங்களில் இளைஞர் கைகளில் தான் நாம் நாடே உள்ளது. இந்த 2021 தமிழ்நாட்டில் மட்டும் இளைஞர்கள் வெற்றி பெற்றால் அடுத்தது அடுத்து மாரி இந்தியாவே இளைஞர்கள் ஆட்சிபுரிவார்கள்.

முத்துக்குமார்: அது வரை இப்படித்தான் இருக்க வேண்டுமா என்றான்.

ராஜா: ஆமாம், நாம் தான் ஒட்டை விலை பேசி விட்டோமே. பணம் கொடுத்தான் அல்லவா தேர்தல் நேரங்களில். அது இப்போது புரிந்து இருக்கும் என் குடுத்தான் என்று?

அம்மா: மக்களுக்கு விழிப்புணர்வு இல்ல அதன் அதை வாங்கிக்கொண்டார்கள்.

முத்துக்குமார் : இனி வரும் காலங்களில் ஒட்டை விக்காதீர்கள்.

அம்மா : ம்ம் என்று தலை ஆட்டினாள்.

காலங்கள் உருண்டு ஓடின 2021 தேர்தல் வந்தது. ராஜாவும் குடிமகன் ஆனான். இன்னும் மூன்று நாள் தேர்தல் இருக்க கட்சிக்காரர்கள் பணம் பட்டுவடா செய்தன. எங்கள் வீட்டிற்கும் வந்தார்கள்.

ராஜா: யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்

கட்சிக்காரர்: நங்கள் பணம் கொடுக்கிறோம். உங்கள் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்

ராஜா : என் ஓட்டை யாருக்கு போடவேண்டுமென்று எங்களுக்கு தெரியும் மரியாதையா ஓடிவிடுங்கள்.

அம்மா: அய்யா நீங்கள் எந்த கட்சிய?

கட்சிக்காரர்: -------------------------------

ராஜா: அம்மா, கோபத்துடன் பார்த்தான். அம்மா நான் சில வருடங்களுக்கு முன்னாள் கூறினேன் அல்லவா. கட்சிக்காரர்களை பார்த்து செல்லுங்கள் என்றான்.

அனைவரும் சென்று விட்டார்கள். ராஜா அம்மாவிடம் ஏன் அம்மா பணம் நாம் சம்பாதித்துக்கொள்ளலாம் என்றான். இல்லடா தேர்தல் அதிகாரிகளிடம் இதை கூற வேண்டும்.
அதற்காகவே கட்சி பெயரை கேட்டேன் என்றாள்.
ராஜா மகிழ்ச்சியில் சிரித்தான். இதே போல் அனைத்து வீடுகளிலும் வாங்கவில்லை. காரணம் இளைஞர்கள் விழ்ப்புணர்வு அந்த ஊரில் நடந்தது. அனைவரும் திருந்திவிட்டார்கள் இளைஞர் மகிழ்ச்சி அடைந்தார்கள் இப்போதே நாம் வென்று விட்டோம் என்று. தேர்தலிலும் வெற்றி பெற்றனர். அனைத்து மக்களும் ஒன்றாக ஆனார்கள். பாகுபாடு சாதி மதம் ஒழிக்கப்பட்டது. குற்றங்கள் களைய பட்டன. இதே போல் அனைத்து மாநிலமும் மாறின. 2025 ல் வல்லரசு ஆனது இந்தியா.இளைஞர்கள் அனைத்திலும் வெற்றி நாட்டினர்.முதல் முறையாக மக்கள் அவரவர் குழந்தைகளை படுச்சு அரசியலுக்கு போ என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

இதற்கு முற்றிலும் முக்கிய காரணம் ஜல்லிக்கட்டு பிரச்சனை.விழித்தெழு தமிழா உறக்கத்தில் இருந்து எழுந்துவா?
இது நாம் நாடு. போதும் இனிவரும் காலங்கள் நமது கைகளில்?ஆளப் போறான் தமிழன்

இங்கு எதாவது தவறாக இருந்தால் மன்னிப்பு கூறிக்கொள்கிறேன்.இது கற்பனை மட்டும் தான் இது நிறைவேறினால் இந்த நாடு முதல் நாடாக மாறும். தமிழ் வாழ்க! தமிழ் வளர்க்க!!

தமிழன்டா!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : muthukumar (18-Jan-18, 5:58 pm)
பார்வை : 345

மேலே