சிறுவனின் விண்ணப்பம்
இயற்கை அன்னையின் மடியில் தவழ்கிறேன் நானென்பதை மறந்து நாளும் இழிவில் கழிக்கிறோம், கைம்மாறு வேண்டா அன்பை நினையாது...
நானென்ற நான் எப்போதும் நானல்ல. பகுத்துப் பார்க்கிறேன், விடை கிடைக்கல்ல.
நடைமுறை வாழ்க்கைப் பொறுப்பில் நாமும் செயல்படும் சரி,தவறைப் பகுத்தறிந்து...
மாணவப் பருவம் கடந்து கொண்டிருக்கிறேன்,
காலங்கள் இன்னும் கடக்கல,
உலக அமைதிக்காக ஆன்மா போராடும் சக்திகளை ஒன்று திரட்ட இயற்கை அன்னையின் மடியில் தவழ்கிறேன்...
ஊராருடைய அறிவற்ற பேச்சில் காதுகளிரண்டும் செவிடாகும், நம்மை வெறுத்தே உலகம் பயணிக்கும், பயணங்களுக்கு மத்தியில் மனநோய் மாற மருந்து சொன்னால் பழங்காலப் பைத்தியமென்றே முத்திரை குத்தி வைப்பர்...
உலகம் சொல்வது போல் என்னில் தான் தவறு உள்ளதென்றால் இயற்கைப் பரம்பொருளே, என்னை அழித்திடுவாய்...
சத்தியம் செய்கிறேன்,
உன்னை எதிர்த்து அநீதியில் வாழேன்...
ஓம் நமச்சிவாய...
திருச்சிற்றம்பலம்...