எல்லாமாய் நீ ....

முகவரி தந்த உறவிது ....
முதலாய் மலர்ந்த மலரிது ...
வரையறைகள் இல்லாத உறவாய்...
வாடிய பொழுதில் வாழ்க்கையாய்...
கொஞ்சி பேசையில் குழந்தையாய் ...
கோபப்படுகையில் என் கண்ணீராய் ....
என்னை தழுவும் தென்றலாய் ...
என் வினாக்களின் விடையாய் ...
என் சந்தோஷத்தின் சாவியாய்...
என் வலிகள் அறிந்த வித்தகனாய் ...
சில சமயம் சிரிக்க வைக்க ..
சில சமயம் அழ வைக்க ..
சில சமயம் பேச மறுத்து மௌனமாய் வலிகளால் என்னை அடித்தவன் நீ. ..
என்னை செதுக்க தெரிந்த சிற்பியாய் ...
எனக்காக என்றென்றும் என்னுயிர் தோழனாய் நீ ...

எழுதியவர் : (3-Aug-11, 6:24 pm)
பார்வை : 328

மேலே