மலரோடு நான்....
முல்லை விரிந்த பந்தலை
முத்துக் குவியல் சிரிப்பை
ஓவியனும் திகைக்கும் அழகை
இனி நான் எங்கு காண்பேன்
வானவில் வண்ணங்களை எல்லாம்
என் இதயத்தில் தூவிவிட்டு
எந்த வானத்தை தேடிச் சென்றாய்
நதியாக பெருகும் என் விழி நீரை
யார் துடைப்பார்?
முடியாத என் கவிதை
முற்றுப் புள்ளிகளின் தொடர் ஆனதை
யார் அறிவார் ?
அன்பே இன்று
மலரோடு நான்
மண்ணோடு நீ
காதல் வாழ்வில்
இறைவனே வில்லன் ஆனால்
மானுடம் எங்கு வாழும்
----கவின் சாரலன்