நாண்டுக்கிட்டு செத்தவ....................!!!!

இந்த ஊரின் கிழக்கே
மாடசாமி கோயில் இருக்கிறது

ஆடி கெடாவெட்டு
பங்குனி ஊர்ப்பொங்கல்
நேர்த்திகடன்
காதுகுத்து
அன்னதனாம் என
ஆண்டு முழுவதும்
பரபரப்பாகவேயிருக்கும்
மாடசாமி கோயிலில்
மேலத்தெரு முனுசாமி மவ
மல்லிகா நாண்டுக்கிட்டு செத்ததிலிருந்து
ஒரு ஈ காக்காக்கூட
அண்டுறதில்லை
இருந்தாலும்
இன்னமும் இருக்கிறது
இந்த ஊரின் கிழக்கே
மாடசாமி கோயில்........!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (3-Aug-11, 5:39 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 286

மேலே