நாண்டுக்கிட்டு செத்தவ....................!!!!
இந்த ஊரின் கிழக்கே
மாடசாமி கோயில் இருக்கிறது
ஆடி கெடாவெட்டு
பங்குனி ஊர்ப்பொங்கல்
நேர்த்திகடன்
காதுகுத்து
அன்னதனாம் என
ஆண்டு முழுவதும்
பரபரப்பாகவேயிருக்கும்
மாடசாமி கோயிலில்
மேலத்தெரு முனுசாமி மவ
மல்லிகா நாண்டுக்கிட்டு செத்ததிலிருந்து
ஒரு ஈ காக்காக்கூட
அண்டுறதில்லை
இருந்தாலும்
இன்னமும் இருக்கிறது
இந்த ஊரின் கிழக்கே
மாடசாமி கோயில்........!!!!!!