முதுமொழிக் காஞ்சி 2

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். 2

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

பிறர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை விட, ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினால் பிறர் அஞ்சி நடப்பதற்கேற்ற நன்மதிப்புடன் வாழ்வதே சிறந்தது.

பிறருடைய அன்பினும் நன்கு மதிப்பே சிறந்தது என்பதாம்.

கண்ணஞ்சுதல் - ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினாலே பிறர் அஞ்சி நடத்தல்.

கண்ணஞ்சப்படுதல் - பிறர் அஞ்சி நடக்கத்தக்க நன்மதிப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-18, 10:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 167

மேலே