பெண்

பெண் என்பவள் பிறப்பின் உச்சம் .
உயிரற்ற உடலை உயிராக மாற்றும் பெண்னே!
நீயோ! பிறப்பின் உச்சம்!
உன் பிறப்போ ! ஒரு அதிசயம்
அதில் கேளிக்கை மட்டும் தான் பெண்னே மிச்சம்.
உயிரும் உணர்வும் சில காலம் தான் பெண்னே!
உன் உயிரால் வந்த நாங்கள்?
உன்னை எக்காலம் வணங்கினாலும்
தீராது பெண்னே!
நீயே இவ்வுலகின் மகத்துவம்!
உலகம் தோன்றி உரிமை பிறந்து
உன் மடியில் தவழ்ந்த நாங்கள்
உன்னை
மறந்தால் மறு ஜென்மம் கூட மரணம் தான்
பெண்னே!
அச்சமும் மிச்சமும் ஓடி ஒடுங்கிட
அடிமை என்பது போதும் பெண்னே!
உச்சமும் உலகமும் உன்னை போற்றி வணங்கிட
இனி!
ஒரு விதி செய்வோம்
பெண்னே!
பாரதி என்றும் நம் கண் முன்னே.......



என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (23-Jan-18, 12:06 am)
Tanglish : pen
பார்வை : 1540

மேலே