முதுமை வந்துவிட்டது

வேட்க்கை தீர்ந்ததும்
யாக்கை புரிந்ததும்
காக்கை அழகானது
கொள்கை தளர்ந்தது
கேளிக்கை மிகுந்தது
வாழ்க்கை தெரிந்தது
இருந்தும்
கயிறிட துடிக்குது
கால் விரல்கள்...
மூக்கு கண்ணாடி தேடுது
கை விரல்கள்
அவனோ! அவளோ!
கவனிப்பதில்லை - இருந்தும்
புலம்பும் உதடுகள்...
கதைகள் பல கேட்க
துடிக்குது செவிகள்
கதை சொல்லத்தான்
இல்லை உறவுகள்
ஓடி ஓடி
முதுமை வந்தது
ஓய்வில் புரிகிறது
தனிமையும்!!!
- மூ.முத்துச்செல்வி