முதுமை வந்துவிட்டது

வேட்க்கை தீர்ந்ததும்
யாக்கை புரிந்ததும்
காக்கை அழகானது

கொள்கை தளர்ந்தது
கேளிக்கை மிகுந்தது
வாழ்க்கை தெரிந்தது

இருந்தும்

கயிறிட துடிக்குது
கால் விரல்கள்...

மூக்கு கண்ணாடி தேடுது
கை விரல்கள்

அவனோ! அவளோ!
கவனிப்பதில்லை - இருந்தும்
புலம்பும் உதடுகள்...

கதைகள் பல கேட்க
துடிக்குது செவிகள்

கதை சொல்லத்தான்
இல்லை உறவுகள்

ஓடி ஓடி
முதுமை வந்தது
ஓய்வில் புரிகிறது
தனிமையும்!!!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (24-Jan-18, 9:08 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 1255

மேலே