காதல் வடியும் இரவு

இருள் வடியும் இரவு
தனிமையில் நான்
விண்மீன்கள் வெளிச்சத்தில்
உனை காண வந்தேன்...
காரிருளில் கரையாத
வெண்ணிலவின் குளிரொளியில்
உனை காண வந்தேன்....
ஊர் உறங்கும் நேரம்
யாரும் இல்லை இரவு
ஆனாதையான தெருவோரம்
நான் மட்டும் தனிமையில்....
உன் வீட்டு ஜன்னலை
கொஞ்சம் திறந்து பார்..
உன் அழகை பார்த்து
வெண்ணிலா பொறாமையால்
முகம் மூட முகில் தேடும்...
என் இரவும் மோட்சம் பெரும்...

எழுதியவர் : சந்தோஷ் (29-Jan-18, 8:43 am)
பார்வை : 121

மேலே