மஞ்சள் நீரோடு மாமன்---காப்பியக் கலித்துறை

காப்பியக் கலித்துறை :


புகைப்பிடித்தல் :
=============

வெண்கு ழலதைப் புகைத்தேநிதம் மேக மாகும்
வெண்மைப் புகையோ?... நுரையீரலின் மீது சூழ்ந்து
புண்பட் டுடற்கு ருதிநாளமும் வீண டைந்து
வெண்த ளிரிலை விழுந்தீயென புற்று நோயே...


குறிஞ்சி :
=======

நீகந் தவழ்தல் நெடுமாமலை யாடை யேற்றல்
போகந் தருஞ்செங் கதிர்தோன்றுதற் பொட்டு வைத்தல்
தாகந் தணிக்குஞ் சுனையூற்றுகள் புன்ன கைத்தல்
ஆகங் குளிந்தும் அழகேறியும் வீற்றி ருப்பாள்...


மஞ்சள் நீரோடு மாமன் :
===================

தும்பை மலர்ப்போல் துகிலேற்றவன் வீதி வந்தே
அம்பை விழியால் அகமேவியே மஞ்ச ளூற்றும்
பம்மை யெழிலாட் பனிப்பார்வையில் வீழ்த்த வீழ்ந்தும்
அம்மஞ் சளையே அவள்மேனியில் ஊற்றி வெல்வான்...


வாய்ப்பாடு :

தேமா புளிமா புளிமாங்கனி தேம தேமா

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 2:07 pm)
பார்வை : 368

மேலே