பூக்கள் என்பது

பூக்கள் என்பது ...!
-------------------------------------
* இந்த முறையும்
ஏமாந்து போனது
உன்னைச் சுற்றி வந்த
இன்னொரு பட்டாம் பூச்சி...!
* இந்தக் கொளுத்தும் வெய்யிலிலும்
எனக்குத் தும்மல் வருகிறதே
அங்கு மழையா பெண்ணே...!
* வெயிலோடு
மழை பெய்யும் போதெல்லாம்
வெற்றுக் காலில்
வீதியில் நீ நடக்கிறாயோ...!
* உன் இதழோரப் புன்னகையில் மட்டுமே
காமம் கைக் குழந்தையாகிறது....!
* நீ
தட்டில் சோறு வைத்து
காகத்தைக் கூவிஅழைக்கிறாய்...
எதிரில் உள்ள
குட்டிச் சுவற்றில்
வந்தமர்ந்தன கிளிகள்...!
* வார்த்தைகள் கலைத்துப் போட்ட
புதுக் கவிதையை
ஒத்திருக்கிறது
காற்று கலைத்துப் போட்ட
உன்
முன் நெற்றி கூந்தல்...!
* உன் அப்பாவைப் போல
நானும் ஒரு கவிதை எழுதிட வேண்டும்
அதற்கு உன் உதவி வேண்டுமே...!
* சிலர் காதலிக்கிறார்கள்...
பலர் கவிதை எழுதுகிறார்கள்...
நான் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவன்...!
* முறைக்கிறாய்
முள்ளாய் குத்துகிறது...
இருக்கட்டுமே
பூக்கள் என்பது
கள்ளும் முள்ளும் தானே...!
-- வெள்ளூர் ராஜா.