சிந்தனையை கொடுத்துவிடு

உணர்வால் பந்தாடும் மனதை//
சிந்தனையால் தீனி போட்டு//
அமுக்கி விட மன தளர்ச்சி கூடி/
மன அழுத்தங்கள் ஓடி போகுமடி
சின்னஞ்சிறு கிளியே_கண்ணம்மா //

சங்கடங்களை கருவில் சுமந்துவிட்டால் // சாய்ந்து போகுமே வாழ்வு

நீயும் கொஞ்சம் உணர்வாய் சிந்தித்துவிடு//
குறைகளும் ஓடி போய்
முனைப்பை தீண்டி ஞானமதனை
கொடுத்துவிடுமே__கண்ணம்மா

இருளுக்கு ஒளி கொடுப்பது போல
இருளான மனதில் ஒளியான சிந்தனையை கொடுத்துவிடு

வெயிலுக்கு ஏற்ற நிழல் இருப்பது போல//
சலனமின்றி வாழ்வும் நகர்ந்து விடும்

எழுதியவர் : காலையடி அகிலன் (31-Jan-18, 8:54 am)
பார்வை : 94

மேலே