ஒவ்வொரு நாளின் அரங்கேற்றமும்

வான்மேடையில் ஆடி களைத்து
வண்ணநிலவு வாடி தவழ்ந்தது
அரிதாரம் கலைந்த துணை நர்த்தனங்கள்
அரங்கவெளியில் அத்திமீறிக் கிடந்தன

இரவு இராஜ்ஜிய இன்ப இம்சைகள்
விட்டுச் சென்ற வெண்பஞ்சு முகில்கள்
இங்கும் அங்குமாய் குலைந்து கிடந்தன

அம்பலவாணன் அரங்க நாயகன்
ஆத்ம ஒளியுடன் ஆடுகளம் புகுந்தான்
ஒவ்வொரு நாள் அரங்கேற்றமும்
இனிதாய் புதிதாய் ஆரம்பமானது !


கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (7-Feb-18, 1:37 pm)
பார்வை : 91

மேலே