உன் பிரிவு
சந்திரனும் அனலாய் கொதிக்குதடி!
பனிக்கட்டி கூட கை சுட்டதடி!
மார்கழியின் காலையில் வியர்வை
கொட்டுதடி!
பனங் கருப்பட்டி எட்டிக்காயாக கசக்குதடி!
பதமான பஞ்சு மெத்தை' முள் விரிப்பாய் உறுத்துதடி!
மயிலாடும் அழகு குரங்காட்டமாய்
தோணுதடி!
குயில் பாடும் குரலோ காதில்
தேளாய் கொட்டுதடி!
முகம் பார்க்கும் கண்ணாடி
என் முகம் காட்ட மறுக்குதடி!
சம தளத்தில் கால் வைத்தால்
பள்ளம் பாய்ந்தது போல் தோணுதடி!
தோட்டத்து வாய்க்கால் பேராற்று
வெள்ளமாய் பாயுதடி!
விழியிருந்தும் குருடனாய்,
பேச்சிருந்தும் ஊமையாய்,
செவியிருந்தும் செவிடனாய்,
காலிருந்தும் முடவனாய்,
உயிர் இருந்தும் நடைப் பிணமாய்
ஆகிப் போனேனடி! இவையெல்லாம்
எதனால்?
உயிராக இருந்த நீ உறவின்றி பிரிந்ததால்😢😢😢😢😢😢😢😢