ஆண்டாள்

கவிதையில்
தலைநிமிர்ந்த வார்த்தைகள்
பேச்சில் தலைகுனிந்தன.
சொன்னவனும் தலைகுனிந்தான்.

விமர்சித்தவர்களும் தலைகுனிந்தார்கள்.

கௌரவப் பிரச்சினையை
அகௌரவமாய் அணுகினார்கள்.

ஆண்டாளைப் பேசும் தகுதியை
ஆண்டாள் அடியவர்களும்
இழந்தார்கள்.

ஆண்டாளுக்கு என்ன இழப்பு?
ஆண்டாளுக்கு என்ன இழிவு?

ஆண்டாள் இன்றும்
தன்னிருப்பை நிறுவினாள்.

தமிழ் தலைநிமிர்ந்தது
சில தமிழர்கள்
தலை கவிழ்ந்தார்கள்.

ஆண்டாளை
எவனும் உயர்த்திப் பிடிக்கவேண்டாம்;
அவள் உயரத்தில்தான் இருக்கிறாள்!!

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (8-Feb-18, 10:38 am)
பார்வை : 88

மேலே