காந்திக்கு ஒரு கடிதம்

வணக்கம் ஐயா..
நலமா.. கூட இருப்பவர் எல்லாம் சுகமா..

நாங்கள் உங்களை மறக்க மாட்டோம்
பணத்தில் உங்கள் படம் இருக்கும் வரைக்கும் மறக்க மாட்டோம்

அஹிம்சையை கண்டிப்பாக பின்பற்றுகிறோம்
சாலையில் ஏதேனும் குற்றம் கண்டால்
கண்டும் காணாத மாதிரி திரும்பி விடுவோம்

சத்தியாகிரகங்கள் செய்வோரை எல்லாம்
மதிப்பு கொடுத்து
பத்திரமா பார்த்துக் கொள்ள‌
கைது செய்து சிறையில் வைக்கிறோம்

கதராடை அணிவோரை மதித்து
அவர்கள் தரும் பணத்தை
தேர்தலுக்கு முன்பு பெற்றுக் கொண்டு
அவர் சொல்லும் இலவசங்களை
வெட்கமில்லாமல் பெற்றுக் கொள்கிறோம்

வெள்ளையனை வெளியேற்றி விட்டோம்
ஆனால் அவனது கடைகளுக்கு அனுமதி அளித்து
அவனது பொருட்களை வாங்கி உபயோகிக்கிறோம்

இப்படியாக நீர் சொல்லும் வழியெல்லாம் நடந்து
எங்கள் இந்திய வாழ்வை கழித்துக் கொண்டுள்ளோம்..

என்ன நீங்கள் ஏதோ சொல்ல வேண்டுமா?

ஒரு நிமிடம் ஐயா..

வாட்ஸ் அப்பிலோ, முக நூலிலோ ஏதோ செய்தி வந்துள்ளது
சற்று பார்த்து விட்டு வருகிறேன்...

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 7:59 am)
பார்வை : 42

மேலே