அன்பு நண்பா

உன் எள் நுனி வாழ்க்கை
இன்னும் உலரவில்லை
காற்றை பிளக்கும்
உளியென அலைகிறாய்.
மிஞ்சிய மரணத்துடன்
கசங்கிய பாதையில்
கனவொன்றை
புதைத்து மீள்கிறேன்.
உன் அவகாசங்களில்
யாழ் எடுக்க மறந்தால்
உன் நிழல் நகராத
ஒரு நிலத்தில்
உற்று பார் நண்ப...
என் கனவு சொல்லும்
நம்மை தட்டிப்பிரித்த
கால விரிசல்களை...
இரு...
பழுதுண்ட என் கனவு
இனி நீ பற்றிச்செல்...
பூக்கள் உன்னையும்
புரிந்துகொள்ளும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (22-Feb-18, 9:09 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : anbu nanbaa
பார்வை : 1039

மேலே