விண்ணில் பாய்ந்த விண்க-லா-ம்
ஐயா கலாம் அவர்கள் மறைந்த
நாளன்று எழுதியது
எளிமையான பிறப்பெடுத்து
காந்தியக் கொள்கைகளில்
புரண்டெழுந்து
நித்தம் நித்தம் நல்மனிதனாக
வாழும் வித்தையைக்
எம் மனதில்...
கத்தை கத்தையாகப்
பதிவித்தவனே!!!
அறுபது வயதுள்ளவர்களே
கோலோட்சியக் காலத்தில்...
இருபதுகள் நினைத்தால்
இருபது---இருபதுகளிலே
பாரதம் எழுவது உறுதி என
எடுத்துரைத்தவனே....
மனதெங்கும் நீ விதைத்த விதைகள்
காடெனச் செழித்து நின்று
கனிகள் காய்க்கும் தருணத்தில்
அணியெனத் திரண்டிருக்கிறோம்
நாங்கள்
ஆனால்...
அவை உம் பணியென
உறங்கிவிட்டாயே...
இனியும் நாங்கள்
சூரியகாந்தி பூக்களாக
என்றும் உன் வழிகளில்
நடந்திடுவோம்- கதிரவனே!!!
அ.ஜீசஸ் பிரபாகரன்